Wednesday, April 11, 2018

யார் கடவுள் - திருக்குறள்

திருவள்ளுவர் யார் கடவுள் என்பதற்கு கீழ்கண்ட குணம் உள்ளவனே கடவுள் என்கிறார்.

  • வாலறிவன் - தூய அறிவு உடையவன் 
  • மலர் மிசை ஏகினான் - மலர் போன்ற மனதில் இருப்பவன் 
  • வேண்டுதல் வேண்டாமை இலான் - விருப்பு வெறுப்பு இல்லாதவன் 
  • தனக்கு உவமை இல்லாதான் - தனக்கு இணை இல்லாதவன் (ஒன்றாக இருப்பவன்)
  • எண்குணத்தான் - எட்டு குணங்கள் உடையவன் (தன்வயம் ஆதல், தூய உடல், இயற்கை உணர்வு ஆதல், முற்றும் உணர்தல், பாசங்களில் இருந்து  நீங்குதல், பேரருள் உடைமை , முடிவில்லாத ஆற்றல் உடைமை,வரம்பு இல்லா இன்பம் உடைமை )
  • பகவன் - பகுத்து காப்பவன் 
  • இறைவன் - (எங்கும்) தங்கி இருப்பவன் 
  • பொறிவாயில் ஐந்து அவித்தான் -(ஐம்புலன்களால் எழும் ஆசை)ஆசை இல்லாதவன் 
  • அறவாழி அந்தணன் - அற கடலாக விளங்கும் சான்றோன் 


Tuesday, April 10, 2018

கடவுள் உன் உள்ளத்தில் இருக்கிறான் - சிவவாக்கியர்


நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறி சுவை அறியுமோ

ஓசை உள்ள கல்லை நீ உடைத்து இரண்டாய் செய்துமே
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்த கல் சொல்லுமே 

மொழி பற்று

பீகாரில் பிஹாரி மொழி இருக்க ஹிந்தி பேசினால் பெருமை தமிழ்நாட்டில் தமிழ் மொழி இருக்க ஆங்கிலம் பேசினால் பெருமை