Wednesday, April 11, 2018

யார் கடவுள் - திருக்குறள்

திருவள்ளுவர் யார் கடவுள் என்பதற்கு கீழ்கண்ட குணம் உள்ளவனே கடவுள் என்கிறார்.

  • வாலறிவன் - தூய அறிவு உடையவன் 
  • மலர் மிசை ஏகினான் - மலர் போன்ற மனதில் இருப்பவன் 
  • வேண்டுதல் வேண்டாமை இலான் - விருப்பு வெறுப்பு இல்லாதவன் 
  • தனக்கு உவமை இல்லாதான் - தனக்கு இணை இல்லாதவன் (ஒன்றாக இருப்பவன்)
  • எண்குணத்தான் - எட்டு குணங்கள் உடையவன் (தன்வயம் ஆதல், தூய உடல், இயற்கை உணர்வு ஆதல், முற்றும் உணர்தல், பாசங்களில் இருந்து  நீங்குதல், பேரருள் உடைமை , முடிவில்லாத ஆற்றல் உடைமை,வரம்பு இல்லா இன்பம் உடைமை )
  • பகவன் - பகுத்து காப்பவன் 
  • இறைவன் - (எங்கும்) தங்கி இருப்பவன் 
  • பொறிவாயில் ஐந்து அவித்தான் -(ஐம்புலன்களால் எழும் ஆசை)ஆசை இல்லாதவன் 
  • அறவாழி அந்தணன் - அற கடலாக விளங்கும் சான்றோன் 


No comments:

Post a Comment

மொழி பற்று

பீகாரில் பிஹாரி மொழி இருக்க ஹிந்தி பேசினால் பெருமை தமிழ்நாட்டில் தமிழ் மொழி இருக்க ஆங்கிலம் பேசினால் பெருமை