திருவள்ளுவர் யார் கடவுள் என்பதற்கு கீழ்கண்ட குணம் உள்ளவனே கடவுள் என்கிறார்.
- வாலறிவன் - தூய அறிவு உடையவன்
- மலர் மிசை ஏகினான் - மலர் போன்ற மனதில் இருப்பவன்
- வேண்டுதல் வேண்டாமை இலான் - விருப்பு வெறுப்பு இல்லாதவன்
- தனக்கு உவமை இல்லாதான் - தனக்கு இணை இல்லாதவன் (ஒன்றாக இருப்பவன்)
- எண்குணத்தான் - எட்டு குணங்கள் உடையவன் (தன்வயம் ஆதல், தூய உடல், இயற்கை உணர்வு ஆதல், முற்றும் உணர்தல், பாசங்களில் இருந்து நீங்குதல், பேரருள் உடைமை , முடிவில்லாத ஆற்றல் உடைமை,வரம்பு இல்லா இன்பம் உடைமை )
- பகவன் - பகுத்து காப்பவன்
- இறைவன் - (எங்கும்) தங்கி இருப்பவன்
- பொறிவாயில் ஐந்து அவித்தான் -(ஐம்புலன்களால் எழும் ஆசை)ஆசை இல்லாதவன்
- அறவாழி அந்தணன் - அற கடலாக விளங்கும் சான்றோன்
No comments:
Post a Comment