புதிய ஆத்திச்சூடி என்பது பாரதியார் குழந்தைகளுக்காக பாடிய பாடல். இதில் ஒருவர் எந்த மாதிரி ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இது குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பொருத்தமானவை.
தமிழ் உயிர் எழுத்துக்களை முதல் எழுத்தாக கொண்ட 12 வரிகளை கொடுத்துத்துள்ளேன்,.
தமிழ் உயிர் எழுத்துக்களை முதல் எழுத்தாக கொண்ட 12 வரிகளை கொடுத்துத்துள்ளேன்,.
- அச்சம் தவிர்
- ஆண்மை தவறேல்
- இளைத்தல் இகழ்ச்சி
- ஈகை திறன்
- உடலினை உறுதி செய்
- ஊண் மிக விரும்பு
- எண்ணுவது உயர்வு
- ஏறு போல் நட
- ஐம்பொறி ஆட்சி கொள்
- ஒற்றுமை வலிமையாம்
- ஓய்தல் ஒழி
- ஒளடதம் குறை
- பயப்படாதே
- மன வலிமையை இழக்காதே
- பின்னடைதல் இகழ்ச்சிக்கு உரிய செயல்
- மற்றவர்களுக்கு கொடுத்து உதவு
- உடலை உறுதியாக வைத்துக்கொள்
- உணவை விரும்பு சாப்பிடு
- எண்ணம் உயர்வாக இருக்கட்டும்
- தலை (காளை மாடு போல) நிமிர்ந்து நட
- கண் , காது , மூக்கு , வாய் , தோல் ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வை
- அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதே வலிமை
- சோர்வாக இருக்காதே
- மருந்தை நாடுவதை குறைத்துக்கொள்
No comments:
Post a Comment