Monday, March 26, 2018

காவிரி ஆற்றின் மேன்மை - பட்டின பாலை

கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் சோழ நாட்டை பாடிய பாடல்.

பாடல்:
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற்பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலை தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்

விளக்கம் :
குற்றம் இல்லாத புகழுடன் விளங்கும் வெள்ளி என்ற விண்மீன் திசை மாறி தெற்கு நோக்கி சென்றாலும், நீர்துளியை உணவாக உண்ணும் வானம்பாடி என்ற பறவை வருந்த புயல் மாறி வானம் மழை பெய்யாவிட்டாலும் தான் பொய்யது மலையில் தொடக்கி கடலில் முடியும் காவிரி. அது தன நீரை பரப்பி மண்ணை பொன்னாக ஆக்கும் .

No comments:

Post a Comment

மொழி பற்று

பீகாரில் பிஹாரி மொழி இருக்க ஹிந்தி பேசினால் பெருமை தமிழ்நாட்டில் தமிழ் மொழி இருக்க ஆங்கிலம் பேசினால் பெருமை