Thursday, March 8, 2018

மக்களின் இயல்பே நாட்டின் இயல்பு - புறநானுறு

ஒளவையார் பாடிய பாடல் (புறநானுறு:187) :

பாடல்:
நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்வழி ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே

விளக்கம்:
நாடு என்ற ஒன்றாகவோ காடு என்ற ஒன்றாகவோ, பள்ளம் என்ற ஒன்றாகவோ, மேடு என்ற ஒன்றாகவோ,எப்படி இருந்தாலும் ஆண்கள் நல்ல வழியில் செல்பவர்களாக இருந்தால் நீயும் நலமுடன் வாழ்வாய், நிலமே!

No comments:

Post a Comment

மொழி பற்று

பீகாரில் பிஹாரி மொழி இருக்க ஹிந்தி பேசினால் பெருமை தமிழ்நாட்டில் தமிழ் மொழி இருக்க ஆங்கிலம் பேசினால் பெருமை